எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மேசைக்கு அடியில்..! பசை இருந்தால் தான் எதிலுமே ..............

மேசைக்கு அடியில்..!

  

பசை இருந்தால் தான் எதிலுமே

........... பற்றென்பது வருமாம் மானுடர்க்கு


தசை தகனம் செய்வதற்குக் கூட

........... தரணியில் காசு கேட்கும் அவலம்


பூசைக்காக ஆலயம் சென்றால் கூட

........... புகுந்துள்ளே விரைவு தரிசனம் காண...


விசையறு பந்து போல் வேகமாய்

........... விலை பேசும் எண்ண மெங்கும்


மேசைக் கடியிலே தான் பேரமெலாம்

........... மேலாக நடக்கு தம்மா அவனியில்.!


அசையா அரசையும் கலைக்கும்..மேசை

...........அடியில் நடக்கும் பெருங் குதிரைபேரம்


திசை யெட்டும் பரவும் தீபோல்

...........தாவு மிந்த நோய்க்கு மருந்தேது..?
====================================
நன்றி.. படம் ::  லின்க்டு இன்

பொதுவாக, எனக்கு வாட்ஸ் அப்பில் நண்பர்கள் எழுதி அனுப்பும் கவிதைக்கு பதிலாக நானும் கவிதையிலேயே பதிலளிக்கும் வழக்கம் உண்டு.

அப்படி ஒரு நண்பரின் கவிதைக்கு, செப்டம்பர் முதல் நாளில், நான் அனுப்பிய பதில் கவிதை இது.

நாள் : 1-Sep-17, 10:07 pm

மேலே