தாய் என்னும் அற்புத படைப்பை படைத்த பின் பிரம்மனும்...
தாய் என்னும் அற்புத படைப்பை
படைத்த பின் பிரம்மனும்
சிறிது நேரம் யோசித்திருப்பர்
இவளை பார்த்த பின்
நம்மை மனிதன் நினைப்பானா ?
மாட்டவே மாட்டான் ...
அதனாலதான் பணத்தை படைத்தான்
பின் ஆசையை கொடுத்தான்
ஆஹா என்ன ஒரு நினைப்பு
ராமனுக்கு பிறகு இனி ஒருவன் தாய்க்கு
மதிப்பு கொடுக்க போவதில்லை என்று
அவன் தவறாக முடிவு செய்தான்
எத்தனை ராமன்கள்
இங்கு இருக்கிறார்கள் என்று
நாம் காட்டுவோம் -பிரம்மனின்
எண்ணத்தை மாற்றுவோம்
அன்னையை போற்றுவோம்