எண்ணம்
(Eluthu Ennam)
தாயை விட உயிருள்ள எந்த மனிதனும் இல்லை , இந்த உலகில் அன்பை பொழிய ;
உலகம் முடிவிற்கு வரும் எப்போது ? தாயின் பாசம் நின்று விடும் அப்போது.
தாய் என்னும் அற்புத படைப்பை
படைத்த பின் பிரம்மனும்
சிறிது நேரம் யோசித்திருப்பர்
இவளை பார்த்த பின்
நம்மை மனிதன் நினைப்பானா ?
மாட்டவே மாட்டான் ...
அதனாலதான் பணத்தை படைத்தான்
பின் ஆசையை கொடுத்தான்
ஆஹா என்ன ஒரு நினைப்பு
ராமனுக்கு பிறகு இனி ஒருவன் தாய்க்கு
மதிப்பு கொடுக்க போவதில்லை என்று
அவன் தவறாக முடிவு செய்தான்
எத்தனை ராமன்கள்
இங்கு இருக்கிறார்கள் என்று
நாம் காட்டுவோம் -பிரம்மனின்
எண்ணத்தை மாற்றுவோம்
அன்னையை போற்றுவோம்
விண்மீன்களை எண்ண ஆசை
ஆனால் எண்ண முடியவில்லை
விண்ணில் பறக்க ஆசை
ஆனால் பறக்க முடியவில்லை
தெய்வத்தின் வாகனமாக ஆசை
இருந்தேன்!
தெய்வத்தின் வாகனமாக அல்ல
என் தாயின் வாகனமாக
என் தாயே எனக்கு தெய்வம்......!
வாலாட்டும் விலங்கெல்லாம் பாலூட்டும் குட்டிக்கு பாலூட்டும் விலங்குக்கு சோறூட்டத்... (முத்துகிருஷ்ணன்கண்ணன்)
12-May-2016 5:00 pm
வாலாட்டும் விலங்கெல்லாம் பாலூட்டும் குட்டிக்கு பாலூட்டும் விலங்குக்கு சோறூட்டத் தெரியாது.வானத்துப் பறவையெல்லாம் சோறூட்டும் குஞ்சுக்குசோறூட்டும் பறவைக்கு பாலூட்டத் தெரியாது.வாழும் தெய்வமாம் என் அன்னைக்கு மட்டும்தான் பாலூட்டவும் தெரியும்.சொறூட்டவும் தெரியும்.தாயிற்சிறந்த கோயில் இல்லை என்பார்கள்.என் தாயிற்சிறந்த தெய்வமே இல்லை என்பேன் நான். --
மாமுகி