கடின உழைப்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை ஏற்றுக்...
கடின உழைப்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள கடினம் அவசியமில்லை. ஆனால் கடின உழைப்பின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதை நாம் நன்கு உணர வேண்டும். வெறும் கைகளில் காற்றை அடித்தால் சத்தம் வருமா? அப்படி என்றால், இலக்கு என்ன, அதை எப்படி அணுக வேண்டும், அதற்கு வேண்டிய சாதனங்கள் யாது என்பதை அறிந்து தெரிந்து கொள்ளாமல் வெறும் கையில் முழம் போடுவது எந்த ஒரு பூ மாலையோ பூவின் மணம் நிச்சயமாக கிடைக்காது.
எனவே, கடின உழைப்பு தேவை தான். ஆனால் அதற்கு வேண்டிய குறைந்த பட்ச அறிவு, அடிப்படை தேவைகள், அதை முறையாக செய்யும் பக்குவம் மற்றும் திறமை இருப்பின் கடின உழைப்பு சாதாரண பலனை மற்றும் அல்லாது நிறைந்த கூடிய வெற்றியை கண்டிப்பாக பெற்று தரும்.