இந்தியன் மானிடா மானிடா மானிடா, பாரதத் தாயின் புதல்வன்...
இந்தியன்
மானிடா மானிடா மானிடா,
பாரதத் தாயின் புதல்வன் நீயடா,
பாரத பூமியின் குடிமகன் தானடா,
ஏழை மக்களுக்கு நீ உதவடா,
எதிரியை கண்டு ஏவுகணையாய் சீறடா,
தடைகளை தகர்த்து முன்னேரடா,
தலைகனம் அகற்றி பண் பாடடா,
தாயகம் தான் உன் தாயடா ,
தெப்பக் குளத்தில் தாமரை நீயடா,
வீரத்தில் சிங்கம் போல் சீறடா,
பாசத்தில் பாரி போல் மாரடா,
உழைப்பதில் உனக்கு நிகர் யாரடா,
உணர்வில் உதிரத்தை உதிர்த்து பாரடா,
மொத்தத்தில் இந்தியப்
பூஞ்சோலையில் பூத்தப் பூ நீயடா……………………