வலது பக்கம் இன்னொரு இதயம்..!!!

சிறுபூவே இலையொன்று தருவாயா,
அவள் இதழ் மூட வேண்டும்.

காலம் பார்க்காமல் தந்த காதலை,
இப்போதே திருப்பி கேட்கிறாள்.
சோகமின்றி சொன்ன கவிதைகளை
கடனாக்கி அன்பு செய்கிறாள்..!!!

இது காதல் அல்ல கருணை என்று
செய்முறை விளக்கம் காட்டிவிட்டாள்..!!
ஒன்றும் புரியாமல் சொல்ல தெரியாமல்
வாய்மூடி வார்த்தை நான் விழுங்கி கொண்டேன்..!!
ஏய் இதயமே பெண் இதயமே,
புயல்காற்றும் பூங்காற்றும் வீசிப்போன பின்னே
காற்றுக்கு தெரியாது கிழிந்தது பூவின் இதயம்..!!
சிறு மழை வந்து பூமியை நனைக்கும் போது
வானைக் கிழிப்பதில் நியாயமில்லை..!!!

இது காதல் இல்லை வெறும் தேடல் என்று
அர்த்தமில்ல வார்த்தை வீசி விட்டாள்..!!
அடக்க தெரியாமல் அடங்கி நடிக்காமல்
என் கோவம் அவள் மேல் காட்டிவிட்டேன்..!!
ஏய் இதயமே பெண் இதயமே,
மழையோடு வெயில்வந்து வண்ணம் தந்த பின்னே
தெரியாது வானவில்லின் வண்ண அழுகை..!!
அடி உன்னை நிறுத்த இதயத்தில் இடமின்றி
கடன் வாங்கிவிட்டேன் வலது பக்க இதயமொன்றை...!!

எழுதியவர் : மனோ ரெட் (22-Apr-13, 5:10 pm)
பார்வை : 157

மேலே