நண்பன் ஒருவன் போன பிறகு...!!!

கல்லூரி புகைப்படம் திருப்பி பார்த்தால்,
கையில் ஒட்டியது உன் முகம் தான்..!!
மறக்க இதயமின்றி எங்கோ தேடி
மீண்டும் தூசிதட்டி நினைவை எழுப்பினேன்..!!
யாரும் சொல்லாமலே உன் ஞாபகம்
சூழ் கொண்டது என் நெஞ்சில்..!!

முதல் நாள் விடுதியில்
தலை முட்டிக்கொண்டதில்
தொடங்கியது நம் நட்பு..!!
அறிமுகமின்றி மின்னலாய்
மூளையில் கீச்சிட்டாய்..!!
முகவரியில்லா நம் நட்புக்கு
முகம் தேவைப்படவில்லை..!!

பிரிவில்லா மாற்றான் போல
பிரிந்து இணைத்திருந்தோம்..!!
உண்ணும் போதும்,
விளையாடும் போதும்,
காதலி தேடும் போதும்,
என எண்ணற்ற நிமிடங்களில்
இணைபிரியா மின்சாரமாய்
உன்னுடன் நான் என்னுடன் நீ..!!

நினைவிருக்கிறதா உனக்கு..???
பொய் சொல்லி சென்ற சினிமாக்களும்,
காரணமின்றி வந்த காய்ச்சலும்,
கல்லூரி மரத்தில் எழுதிய கையொப்பங்களும்,
கடன் வாங்கிய உன் சட்டைகளும்,
எப்போதும் தூங்காமல் என்னுள்ளே
உன்னை நினைக்க செய்கிறது..!!

நாம் பிரியப்போவதில்லை என
ஆயிரம் முறை சத்தியம் செய்தோம்..!!
எவன் கண் வைத்தானோ,
சத்தியங்கள் சாத்தியமற்று போனது..!!
உன்னுடன் நான் கண்ட கனவுகள்,
றெக்கையில்லா பறவை போல
வானம் நோக்கி வாய் பிளந்தே இருக்கிறது!!

நீ யாரென பலமுறை நான் கேட்ட போதெல்லாம்,
நீயோ சிரித்துகொண்டே நண்பன் என்பாய்..!!
என்னை விட்டு நீ போன பின்பு,
உன் சிரிப்பின் அர்த்தம் புரிந்தது
நல்ல நட்பு நிரந்தரமில்லை என்று...!!!

எழுதியவர் : மனோ ரெட் (29-Apr-13, 1:53 pm)
பார்வை : 517

மேலே