நானும் கவிஞன் ஆகி விடுவேனோ....???
யாருமில்லா தனிமையின் ஓரம்,
யாருக்கோ எங்கோ நான் காத்திருந்தேன்,
கனவில் பூத்திருந்தேன்..!!
தீப்பிடித்த நிலவாய் நானும்
கண்கள் சிவக்க பார்க்கிறேன்,
நிஜமாய் நடிக்கிறேன்..!!
உணர்வெல்லாம் ஊமையாகி
உணர்ச்சியின்றி தவிக்கிறேன்,
கனவில் தினம் நீயும் வர
தூங்கி தூங்கியே எழுகிறேன்,
புத்தகம் நடுவில் உன் ஓவியம் வரைந்து
நீ அறியாமல் ரசிக்கிறேன்..!!
"யார் நீ" என்று என்னை நீ கேட்டால்
அந்த வார்த்தையின் அகலம்
என் உயிரை குடித்து விடுமே..!!
அடியே,நீ போனால் நானெங்கே
போய் என்னுயிர் கலப்பேனோ..??
பார்க்கும் இடமெல்லாம்
உன் பெயரை எழுதி வைக்கிறேன்,
எழுதி வைத்து அழிக்க மனமின்றி
ரத்தம் பூசி உயிர் கொடுக்கிறேன்..!!
சட்டென்று நீ திரும்பி பார்த்தால்
பட்டென இதயம் வெடிக்கிறதே,
எங்கேயோ நீ சிரித்தால்
எனக்குள்ளே வெக்கம் பிறக்கிறதே..!!
நான் யாரென்று தெரியாமல்
நீ எனதாகி விட்டாய்...!!
எனக்குள்ளே புகுந்து
உன் உயிர் பாய்ச்சுகிறாய்..!!
உன்னை நினைக்க வைத்தே
என்னையும் கவிஞனாக்கி விடுவாயோ..??