என்னதான் வேண்டுமடி உனக்கு...???

திருப்பி திருப்பி கேட்டால்
தர மறுத்து விடுவேன்,
உன் கனவில் நானோ
வர மறுத்து விடுவேன்..!!
யாரோ போல என்னை கொல்லாதே,
என்னை விட்டு எங்கும் செல்லாதே..!!

இருப்பதுவோ குறுகிய நெஞ்சம்,
நீயும் கேட்கிறாய் அதில் கொஞ்சம்,
காதல் செய்ய என் இதயம் கெஞ்சும்,
உண்மை காதல் இவ்வுலகை மிஞ்சும்...!!!

கண்கள் கலங்கி நீயும் பேச,
இதய ஓசை இரவை எழுப்ப,
உறங்கி போன நிலவும்
கண்ணீர் சிந்துகிறதே...!!

கையை பிடித்து இறுக்கி அணைக்க,
ரத்த ஓட்டம் இன்னும் தெறிக்க,
தொலைந்து போன காதல்
எனக்கு மறுபடி வேண்டுமே..!!!

விரல்கள் பிடித்து விண்ணில் நடக்க,
இன்னும் வேண்டும் நூறு வருடம்..!!
மொத்தமாக நீ தந்தால் போதுமே
வேறு எதுவும் வேண்டாம்..!!

உன்னை இழந்து நானும் தவிக்க,
தென்றல் கூட புயலாய் அடிக்க,
உன் கோப வெப்பம் என்னை
உயிருடன் தீ மூட்டுகிறதே..!!

உள்ளங்கையில் உன்னை வைத்து
உயிர் ரேகையில் கலப்பேன்,
மீண்டும் ஒரு உயிர் நீ கேட்டால்
என்னை பிரித்து கொடுப்பேன்..!!

ஒரு பொழுது நினைத்தால் போதுமே,
என் உயிர் எங்கும் வாழுமே,
உயிர் பிரியும் நேரமா சொல்லுவாய்
உன் காதலை என்னிடம்...???

எழுதியவர் : மனோ ரெட் (15-Jul-13, 11:57 am)
பார்வை : 115

மேலே