நீ எனக்காகத் தான்

பூக்கள் மலர்வது
உன் குழலைக் கண்டு தான்!

பொன்னை வெட்டி எடுப்பது
உனக்கு போட்டியாகத் தான்!

தென்றல் வீசுவது
உனக்கு சாமரம் வீசத் தான்!

செந்தமிழ் வந்தது
மங்கை நீ பேசத் தான்!

என்னைப் படைத்தது
உன்னைக் காணத் தான்!

பெண்ணே,
உன்னைப் படைத்தது
எனக்காகத் தான்!

நீ எனக்காகத் தான்....

இதை அறியாமல்
என்னை ஏன் சித்ரவதை
செய்கிறாய்?

எழுதியவர் : க.கிருஷ்ணகுமார் (30-Aug-15, 12:58 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 284

மேலே