தொலைந்த முகவரி

தொலைந்த உந்தன்
முகவரியோடு.....
எந்தன் முடிவுரையும்
முற்றுப்பெற்று
முடிந்து போனது.....!!

ஒருவார்த்தை பேசுவாய்
என்றே
எந்தன் ஒருவாழ்க்கையும்
முடிந்ததே
போனது.....
சின்னச் சின்ன
வாழ்க்கையில்....சிறு
இதயக்கூட்டில்
பெரிய பெரிய காயங்கள்....
தருவது யார்....?
பெறுவது யார்.....?

என் வாழ்க்கை
வானில்.....வானவில்லும்
கானல் நீரும்
காலமெல்லாம் நீயே......
நீயின்றி நகரும்
காலமெல்லாம் நெஞ்சில்
தீயே......!!!

நெஞ்சமே நெஞ்சமே
இது நிஜமடி.....
உன்னை நினைக்காமல்
நினைத்து சாவதும்
நிஜமடி.....
உறக்கம் தொலைப்பதும்
கனவில்
கலங்குவதும்
காரணம் நீயடி.....!!!

இந்த உடலும்
உள்ளமும் ஊனமாய்
போனது.....மௌனமாய்
நீ மறைந்து
மறந்துபோனதால்.....
மௌனங்கள்
கலைந்தாலும்
நான் கொண்ட ரணங்கள்
ஆறாது
உந்தன்
காரணங்கள் கேட்டு......!!!

உறவு தெய்வீகம்
தான்.....உன்னைத்
சேர்ந்தால்.....இல்லையேல்
இது வெறும்
பொய் சுகம் தான்.....
உன்னோடுதான்
நான் இருப்பேன்
இறந்தாலும்
இருந்தாலும்.....!!!!!!

அன்பே
என் அன்பே.....
நான் அழுவது
விழவில்லையா உந்தன்
செவிகளில்.....!

வலிகள்
கொல்லும்
முன்பே.....எந்தன்
விழிகளில்
வந்து போடி.....மகிழ்ந்து
சாகிறேன்.....!!!!

எழுதியவர் : thampu (9-Jan-17, 4:20 am)
சேர்த்தது : தம்பு
Tanglish : tholaintha mugavari
பார்வை : 196

மேலே