ஜல்லிக்கட்டுக்கு ஓர் கும்மிபாடிடுவோம்

கும்மியடி பெண்ணே கும்மியடி
குய்யடி பெண்ணே கும்மியடி

காவேரியில் நீர் வந்து சேர்ந்திட-அங்கு
கல்லணை மதகுகள் திறந்துவிட
கீழே வாய்க்காலில் நீர் வந்து நிரம்பிவிட
காய்கின்ற பயிர்தாங்கும் நிலங்களெல்லாம்
பாரு உயிர்பெற்று சிரிப்பது போல் தோணுதடி

கும்மியடி பெண்ணே கும்மியடி
நாட்டின் நலமறிந்து கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி
நாட்டின் நலமறிந்து கும்மியடி


நாட்டு உச்ச நீதி மன்றம்
நமக்கு நல்லதோர் தீர்ப்பு
தந்திடும் நம்பு இன்னும்
ஓரிரு நாட்களிலே நம்ம
வடிவாசலில் இருந்து
பாய்ந்து ஓடிடும் காளைகள்
அதை அடக்கிட முன்னே
பாய்ந்து வருவார் நம்
வீரத் தமிழ் காளையர்கள்
நம்ம ஜல்லிக் கட்டும்
சீரும் சிறப்பாய் நடந்திடுமே

கும்மியடி பெண்ணே கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி

ஜல்லிக் கட்டுக்கு போராடும்
நம்ம தமிழ் மாணவர்க்கு அதை
ஏற்று ஒத்துழைக்கும் தமிழ் மக்களுக்கு
தோள்கொட்டுவோம் பெண்ணே
தோள்கொட்டுவோம்

அமைதியுடன் போராடலாம்
அன்பு தமிழ் மக்களே எப்போதும்
அண்ணல் காந்தி வழியில் போராடாடுவோம்
வெற்றி நமக்கே அறிந்திடுவாய்
என் அன்பு தமிழ் பெருமக்களே

கும்மியடி பெண்ணே கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி

நாட்டின் நலமறிந்து கும்மியடி
கும்மியடி பெண்ணே கும்மியடி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (21-Jan-17, 9:07 am)
பார்வை : 85

மேலே