கண்ணீர் சிந்தும் மேகம் 555
என் ஜீவனே...
கலங்கி நிற்கும்
உன் இதயத்தை...
நான் உரிமைகொள்ள
காத்திருக்கிறேனடி...
காயம்கொண்ட உன் இதயத்திற்கு
என் அன்பால் களிம்பு பூச ஏக்கமடி...
மீண்டும் உன் இதழ்களில் புன்னகை
பார்க்க என் உயிரையும் கொடுப்பேனடி...
என் பாதச்சுவடுகள் அருகே
உன் பாதசுவடுகள் பதிந்தால்...
என் வாழ்வே சொர்க்கமடி...
சொர்க்கமாகும் என் வாழ்வில்
என் ராணியாக உன்னை குடியமர்த்த...
என் உள்ளம் ஏங்குதடி
சம்மதம் சொல்வாயா கண்ணே...
நீ காட்டிய பாசம் பிறர்க்கு
புரியாமல் இருக்கலாம்...
என் நேசத்தை நீ உணராமல்
இருந்துவிடாதே...
கலங்கிய முகத்தோடு
என் கரம் பிடித்தாலும்...
உன்னை புன்னகை
முகத்தோடு என்றும் வாழவைப்பேன்.....