ஜெயலலிதா அம்மாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் என்றென்றும் ராணி நீ தான்
அரசியலில் உன்னை தவிர்த்து ஒன்றுமே இல்லை
கம்பீரத்துக்கே உருவம் கொடுத்தாய் நீ

எதிரிகள் கூட்டமாக நின்று எதிர்த்த போது
தனியாக நின்று மக்கள் படையோடு சேர்ந்து
அவர்களை திக்குமுக்காட செய்தாய் நீ

எத்தனையோ போராட்டங்கள்
ஒரு துளி கண்ணீரும் இல்லை உன் கண்களில்
சிரிப்பினால் வென்றாய் ஒவ்வொரு போராட்டத்தையும்

மரணம் என்ற எமன் நடத்திய போராட்டத்தில் மட்டுமே
நீ போராடி இறைவனடி சேர்ந்தாய் நீ தோற்கவில்லை
எங்கள் இதயங்களில் என்றுமே நீ வாழ்கின்றாய்

பெற்ற அம்மாவிற்கு அடுத்து உன்னையே அனைவரும்
அம்மா என்றழைத்தனர், நீ மறைந்தாலும் எங்கள் நெஞ்சில்
உன் சிரித்த முகம் நீக்கமற நிறைந்து இருக்கிறது...!

இவ்வுலகம் இருக்கும் வரை உன் புகழ் என்றுமே நிலைத்து நிற்கும்
மக்களின் ராணிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பாகா
PRESS FOLLOW BUTTON IN MY BLOG TO SEE MORE
my blog - பாகாவின் பிதற்றல் கவிதைகள்
give your feedback there
thank you for your support

எழுதியவர் : பாகா (24-Feb-17, 10:06 am)
சேர்த்தது : பாகா
பார்வை : 1693

மேலே