உன் உள்ளங்கையில் ஒரு கவிதை

உளமார நேசித்த கவிதை !
உள்ளம் மகிழ்வில் துள்ளி குதித்த கவிதை !
உனக்காய் எழுதப்பட்ட கவிதை !
உறங்காமல் பல இரவுகளை தொலைத்த கவிதை !
உயிரை உணரவைத்த கவிதை !
உயிர் காதல் இதுதான் என உணர்த்திட்ட கவிதை !
அது
ஒரே ஒரு கவிதை மட்டும் தான் -நான் எழுதியது
அதுவே உலகப்பரிசு பெற்ற ஒப்பற்ற கவிதையாய்
எனக்குள் உணர்த்திற்று ! ஆம் !

" கை பிடித்து உன் உள்ளங்கையில்
அழகாய் நான் எழுதிய இரட்டை வரி கவிதை "

எழுதியவர் : வீர.முத்துப்பாண்டி (20-Mar-17, 6:53 pm)
பார்வை : 219

மேலே