முதல் பார்வையில்

தவிர்க்கவும் முடியாமல் ஏற்கவும் தெரியாமல்
திக்கி திணறுது நம் பார்வைகள்

வெறும் காட்சி பொருளாய் இருந்தால்
பார்த்துக்கொண்டு இருப்பேன் உன்னை மட்டும்

நேரம் அதை நிற்க சொல்கிறேன்
நம் பார்வை அது தீண்டும் நொடியில்

தனியாய் இருக்கையில் தவியாய் தவிக்குது
ஈரபதம் என நீ எனில் ஒட்டிக்கொள்ள

இரக்கம் இன்றி தேடுகிறேன்
நீ என்னில் இறுக்கமாய் இருந்துகொள்ள

தயக்கம் இருந்தும் பார்க்கிறேன்
பார்வையில் என் காதல் பத்திரமாய் எழுதி எழுதி..............

எழுதியவர் : வான்மதிகோபால் (19-Apr-17, 2:13 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : muthal paarvaiyil
பார்வை : 257

மேலே