மண்ணிலே பிறந்தோம் மகிழ்வினை இழந்தோம்
வீதிதான் எங்கள் இல்லம்
விண்ணினால் வேய்ந்த கூரை
பசியினால் துடிக்கும் பிள்ளை
பணமெங்கள் கையில் இல்லை
கண்களால் வழியும் கண்ணீர்
கவலையாய் வடியும் செந்நீர்
வேதனை சூழ்ந்த வாழ்வை
வேண்டியா இங்கு பிறந்தோம்
மண்ணிற்கு அழைத்தாய் இறைவா
மகிழ்ச்சியைக் கொன்றாய் சரியா
ஆக்கம்
அஷ்ரப் அலி