வன்முறைக்கலாச்சாரம்

வன்முறைக் கலாச்சாரம்

இயறகை தந்தது உலகம்
நதிக்கரை தந்தது நாகரிகம்
அனுபவம் தந்தது அறிவு
கார்மேகம் தந்தது கருணை
மனிதத்தன்மை தந்தது மனிதநேயம்

பயிர் வாட தான் வாடிய
காக்கை குருவிகளை உறவாடிய
வந்தவர்களை வாழவைத்த
உலகினுக்கு பண்பாடளித்த
கருணைக்கும், காதலுக்கும்,பண்புக்கும் மதிப்பளித்த
நுண்ணறிவும் பகுத்தறிவும் நிறைந்த
மனிதர்களும் நூல்களும் வாழ்ந்த இம்மானுட
மண்ணில் இன்று எங்கிருந்து
வந்தது இந்த வன்முறைக் கலாச்சாரம்?

எழுதியவர் : கவிக்குயில் (6-May-17, 12:10 pm)
சேர்த்தது : கவிக்குயில்
பார்வை : 126

மேலே