கனாக் காண்கிறேன் நிலாக்காதலனே

கொஞ்சி பேசிவிட்டு ,காதல் பசி தூண்டிவிட்டு ,
பஞ்சிமெத்தை இங்கிருக்க ..
வான்மீது நீ மிதக்க..
உன்மீது நான் வெறுக்க ..
முடியவில்லை உயிர் துறக்க.
உன் மௌனச்சிரிப்பு என்னை
மரணத்தில் தள்ளுதடா..
நீ இல்லா தனிமையால்
பசலை நோய் கொல்லுதடா..
தூரத்தில் இருந்தாலும் என் துணை நீயாக..
சேரத்தான் வருவாயோ தாரம் நான் தாயாக..
மாறாத காதல் உன்மீது எனக்கு.
மாறனே மடிசாய் இன்னுமா பிணக்கு..

எழுதியவர் : கு.தமயந்தி (27-Jun-17, 7:01 pm)
பார்வை : 136

மேலே