எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நகுலனின் கவிதை : நான் --------- வழக்கம்போல் என்...

நகுலனின் கவிதை :

நான்
---------
வழக்கம்போல்
என் அறையில்
நான் என்னுடன்
இருந்தேன்.
கதவு தட்டுகிற மாதிரி
கேட்டது
''யார்''
என்று கேட்டேன்
''நான் தான்
சுசீலா
கதவைத் திற "என்றாள்
எந்த சமயத்தில்
எந்தக் கதவு
திறக்கும் என்று
யார்தான்
சொல்ல முடியும்?

நான்(2)
--------------
நேற்றுப்
பிற்பகல்
4:30சுசீலா வந்திருந்தாள்
கறுப்புப் புள்ளிகள்
தாங்கிய
சிவப்புப் புடவை
வெள்ளை ரவிக்கை
அதேவிந்தைப் புன்முறுவல்
உன் கண்காண
வந்திருக்கிறேன் போதுமா
என்று சொல்லிவிட்டுச் சென்றாள்
என் கண் முன்
நீல வெள்ளை
வளையங்கள்
மிதந்தன.

நாள் : 3-Jul-15, 11:28 pm

மேலே