திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இல்லாத அனைத்து சமுதாயத்தினரும்...
திருநெல்வேலி மாவட்டத்தில் தீண்டாமைக் கொடுமை இல்லாத அனைத்து சமுதாயத்தினரும் மத நல்லிணக்கத்துடன் வாழும் கிராமமாக குளக்கட்டாக்குறிச்சி கிராமம் தேர்வு..!!

02.06.14 தேதியன்று கிராமத்து அஞ்சல் துறையின் முன்னோடிகள் என்ற தலைப்பில் தீண்டாமைக் கொடுமை குறித்த கட்டுரையை இந்த கிராமத்து வலைப்பூவில் பதிவு செய்திருந்தேன். ஒரு வருடத்திற்கு முன்பு Dr.அம்பேத்கார் திரைப்படம் பார்த்த பாதிப்பு என்னுள் வெகு நாட்களாக இருந்து கொண்டே இருந்தது. பல நூற்றாண்டுகளாக தலித் மக்கள் சமுதாயத்தின் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதலை நினைத்துப் பார்க்கும்போது, இதயமே வெடித்து விடிவது போல் இருந்தது. இந்த வலைப்பூவில் நான் கட்டுரைகளை பதிவுசெய்யும்போது எந்த மாதிரியான எதிர்மறையான கருத்துக்களையும் பிரதிபலிக்கக்கூடாது என்பதில் தீர்மானமாக உள்ளேன். நேர்மறையான ஆக்கப்பூர்வமான கிராமம் குறித்த வரலாற்று செய்திகளை பதிவுசெய்வதன் மூலம், எதிர்காலத்தில் இந்த கிராமத்து வலைப்பூ முன்மாதிரியான வலைப்பூவாக இருக்க வேண்டும் என்பதில் அதிக முயற்சி எடுத்துக் கொள்கிறேன்..!!

முயற்சிகளுக்கு அவருடைய மின்னஞ்சலில் இருந்து வாழ்த்துச் செய்திகளை அனுப்பினார். இந்திய அளவில் சிறந்த கிராமமாக தேசிய விருது பெறுவதற் காக மாவட்டக் கருவூலத்திலிருந்து 1750 ம் ஆண்டிலிருந்து 2000 ம் ஆண்டு வரைக்கான கிராமத்தின் பதிவேடுகளை கேட்டு விண்ணப்பம் செய்திருந்தேன். இரண்டு முறை மாவட்ட ஆட்சித் தலைவரை நேரில் சென்று பார்த்து விண்ணப்பம் செய்தேன். பிரிட்டீஷ் காலனி ஆட்சி இந்தியாவில் நடைபெற்ற போது பதிவு செய்யப்பட்ட கிராமம் குறித்த விவரங்கள் கூடிய விரைவில் கிடைத்துவிடும். பதிவேடுகள் கிடைத்த பின்பு, வரலாற்று ஆவணங்கள் உருவாக்குவதுதான் இமாலயப் பணி..!! தற்போது தமிழறிஞர் இராபர்ட் கால்டுவெல் எழுதிய வரலாற்று ஆவணமானதிருநெல்வேலி சரித்திரம் என்ற நூலைப் படித்து, அதிலுள்ள குறிப்புகளைக் கொண்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கடந்த ஒரு வருடத்தில் கிராமம் குறித்த பல அறிய தகவல்களை பெற்றுள்ளேன். அதை விட ஒரு மாபெரும் இமாலயப் பணி, கிராமத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை உலக வரலாற்றின் பக்கங்களில் காலத்தால் அழியாத பெயராக இடம்பெறச் செய்ய வேண்டும் என்பது..!! இமாலயக் கனவு நிறைவேறும் நாள் வெகு தொலைவில் இல்லை..!!
அனைவருக்கும் இனிய வைகாசி விசாகத் திருநாள் வாழ்த்துக்கள்..!!

பத்திரிகை செய்தி : Click here
தினமணி பத்திரிகையில் வெளியான செய்தி - 10.06.14 - செவ்வாய்
தீண்டாமை இல்லாத மத நல்லிணக்கக் கிராமமாக
குளக்கட்டாக்குறிச்சிக்கு ரூ.10 லட்சம் பரிசு..!!
தீண்டாமையைக் கடைப்பிடிக்காத, மத நல்லிணக்கத்துடன் அனைத்துத் தரப்பு மக்களும் வசிக்கும் கிராமமாக குளக்கட்டாக்குறிச்சி கிராமம் தேர்வு செய்யப்பட்டு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது. தீண்டாமையைக் கடைப்பிடிக்காமலும், மத நல்லிணக்கத்தைக் கடைப் பிடிக்கும் வகையிலும் உள்ள ஆதிதிராவிட கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டு, அக்கிராமத்தில் குடிநீர், பாதை வசதி, பள்ளிக் கூடங்கள் சீரமைப்பு, குழந்தைகள் நல மையம் கட்டுதல், கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டிகள் அமைத்தல், புதிதாக விளக்குகள் அமைத்தல் போன்ற மக்கள் பணிகள் மேற்கொள்ளும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் சங்கரன்கோவில் ஒன்றியம், குருவிகுளம் ஊராட்சியைச் சேர்ந்த குளக்கட்டாக்குறிச்சி கிராமம் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், குளக்கட்டாக்குறிச்சி கிராம ஊராட்சித் தலைவி அமுதா பாலசுப்பிரமணியிடம் ரூ.10 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியர் மு.கருணாகரன் அவர்கள் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமாய் திட்ட இயக்குனர் அ.விஜயகுமார்,
சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் செழியன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்
நல அலுவலர் இரா.இளங்கோ, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்
க.மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..!!

குளக்கட்டாக்குறிச்சி கிராமம் - குருவிகுளம் யூனியன் பஞ்சாயத்து - திருநெல்வேலி மாவட்டம் - சங்கரன்கோவில் தாலுகா - கழுகுமலையிலிருந்து 8 கீ.மீ - கோவில்பட்டியிலிருந்து 18 கீ.மீ - பாரம்பரியமான விவசாயத் தொழிலை நம்பி வாழும் கிராமம்... ஜனநாயகம் உலாவும் கிராமம்..!! மண்ணில் முளைத்த மனிதர்கள் - உணர்ச்சியில் ஊறிய மொழி - சத்தியத்தில் நிகழும் சம்பவங்கள் - அனுமதிக்கப்பட்ட எல்லைக்கோட்டுக்குள் நிகழும் கற்பனை - நான் நடந்து பழகிய கிராமத்து மண் - எல்லோரும் அறிந்த ஆனால் எழுதப்படாத எளியவர்களின் சரித்திரம் இந்த கிராமத்து வலைப்பூ!!
www.Senthilkumarvision.tumblr.comPosted by Senthil Kumar at 8:30 AM 1 comment: