எண்ணம்
(Eluthu Ennam)
உனது கோபத்தை தூண்டுவதே எதிராளியின் நோக்கமாக இருக்கும், உன்னை... (அன்புடன் மித்திரன்)
07-May-2023 1:03 pm
உனது கோபத்தை தூண்டுவதே எதிராளியின் நோக்கமாக இருக்கும், உன்னை ஜெயித்தே ஆக வேண்டும் என்று அவன் துடிக்கிறான் என்றால்.
அம்மா! என்று.. மதக்கலவரத்தில் வெடிகுண்டுகள்... வெடித்துச்சிதறின மனித உடல்கள்...... (ரா ராஜ்குமார்)
05-Jun-2021 11:37 am
அம்மா! என்று..
மதக்கலவரத்தில்
வெடிகுண்டுகள்...
வெடித்துச்சிதறின
மனித உடல்கள்...
இரத்தவெள்ளமாய்
மக்கள்...
தூரத்தில் ஓர் குரல்
அம்மா! என்று
எந்த மதச்சொல்?
தெளிவான சிந்தனை தெளிந்த நீரோடைப் போல நம் எண்ணங்களை பிரதிபலிக்கும்
எல்லையில்லாவானத்தில்ஓய்வடையாசிறகுகள்சிந்தனைகள்……!... (Gopalakrishnan Vanitha R)
02-May-2018 10:48 pm
எல்லையில்லா
வானத்தில்
ஓய்வடையா
சிறகுகள்
சிந்தனைகள்……!
சென்ற வாரத்தின் சிறந்த படைப்புகளின் தொகுப்பு ஒரு பார்வை - எழுத்து.காம் --படைப்புக்கு பாராட்டுக்கள்
08-May-2018 4:40 pm
தயாரா நீ
சாளரங்கள் இல்லை
சஞ்சாரங்கள் ஏதுமில்லை - பெரும்
சஞ்சலங்கள் மட்டுமே தனிச் சொத்து...
மாடங்களை ஆண்டோரும்
மடங்களில் உண்டோரும் - சீர்
பட்டங்கள் கொண்டோரும்
பாமரத்தில் துவண்டோரும்
மாற்று வசதிகள் காண்பதில்லை
மண்ணறையில்...
இறையருள் மறந்தோம்
இம்மையதை
சுவைத்தோம்
தூதர் வழி
ஒழித்தோம்
தூய வேதம்
கழித்தோம் - நம்
கப்றுகளை
இன்பங்கள் யாசிக்குமா...?
அழியும் நுட்பங்களை
ஆர்ப்பரித்தது போதும்
இறையோன்
எண்ணத்தை
ஈர்த்துக்கொள்...
உள்ளம் மயக்கும்
ஊசல்களை உடைத்து;
எரிக்கும் நரகின்
ஏவல்கள்களைப் பயந்து - ஏகன்
ஒருவனின்
திருப்தியாய்
உள்ளத்தை நிரைத்துக்கொள்...
சாயைகள் ஏதுமில்லா
சூரியனின் உஷ்ணத்தில்
சருகாக எரிந்து;
பிளப்புக்கள் தெரியாது
எலும்புகள் நொறுங்கி;
நச்சுக்கள் பரப்பும்
ஜந்துக்கள் தீண்டி;
முட்செடிகள் உணவாகி;
சீழ்கள் குடிநீராகி;
கொழுந்துவிட்டெரியும்
நரகவாழ்வு - இத்தனையும் கதையாக அல்ல
நாளை உன்
வாழ்வாக...
படைத்தவனின் விசாரணைக்கு முன்
- உன்
சுயத்தை
புடம்போட்டுக்கொள்...
பாவங்களை நினைந்து
- தினமும்
மன்றாடு...
சிலவேலை,
நாளைய சூரியன்- உன்
கப்றுக்கு மேல்
உதிக்கலாம்!