எண்ணம்
(Eluthu Ennam)
தமிழில் தொகைச் சொற்களைப் பற்றிய பதிவு பின்வருமாறு;
தொகைச் சொல் என்பது என்ன?
தொகுத்தல் அல்லது விரித்தெழுதுதல். அதாவது பல கூறுகளை உள்ளடக்கிய ஒரு சொல் தொகைச்சொல் என்பதாகும்.
ஒரு/ஒரே சொல்லின் கீழ் அடங்கும் வரையறுக்கப் பட்ட சில சொற்கள் தொகைச் சொற்கள் எனப்படும்.
தொகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளோடு இங்கு காண்போம்.
ஒன்று ஒருவன் - கடவுள்
இருமை (இரண்டு) இருவினை - நல்வினை, தீவினை / தன்வினை, பிறர்வினை இருதிணை - உயர்திணை, அஃறிணை / அகத்திணை, புறத்திணை இருசுடர் - சூரியன், சந்திரன் இருவகை அறம் - இல்லறம், துறவறம் இருபலன் - நன்மை, தீமை
மும்மை (மூன்று) முக்கனி - மா, பலா, வாழை மூவேந்தர் - சேரன், சோழன், பாண்டியன் முக்காலம் - நேற்று, இன்று, நாளை முத்தொழில் - ஆக்கள், அழித்தல்,காத்தல்
நான்கு நால்வர் ,சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் நாற்குணம் - அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு (பெண்) / அறிவு,நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி (ஆண்) நாற்பயன் - அறம், பொருள், இன்பம், வீடு
ஐந்து ஐந்திணை - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல்,பாலை (பாலை - குறிஞ்சியும் முல்லையும் திரிந்து வெம்மையான நிலம்) ஐந்திலக்கணம் - எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஐம்பூதம் - நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் (வான்) ஐம்பெரும்காப்பியம் - சிலப்பதிகாரம், மனிகீகளை,சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஐம்புலன் - சுவை, ஒளி, ஊறு (தொட்டு), ஓசை, நாற்றம் ஐம்பொன் - பொன், வெள்ளி, செம்பு, இரும்பு, ஈயம் ஐம்பெரும் பாதகம் - கொலை, களவு (கொள்ளை), கள், பொய், குருநிந்தை பஞ்சாங்கம் – திதி, வாரம், நாள், யோகம், கரணம்
ஆறு ஆறு(அரு)சுவை - இனிப்பு,கசப்பு (கைப்பு), உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு (காரம்)
ஏழு ஏழு பருவம் - பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம் பெண் எழுபிறப்பு - தேவர், மனிதர் , விலங்கு, பறவை, ஊர்வன, பறப்பன, தாவரம்
எட்டு எட்டுத்திக்கு - கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென்கிழக்கு, தென்மேற்கு ஒன்பது நவதானியம் - நெல், கோதுமை, உளுந்து, கொள்ளு, எள், பயறு, கடலை, துவரை, அவரை நவரசம் - நகை, அழுகை, இளிவரல் (இழிவு) , மருட்கை (வியப்பு/குழப்பம்), அச்சம், வெகுளி (கபடமற்ற), பெருமிதம் (யோகம்), உவகை (மகிழ்ச்சி), அமைதி (சாந்தம்) நவரத்தினம் / நவமணி – வைரம், வைடூரியம், முத்து, மாணிக்கம், பவளம், கோமேதகம், இந்திரநீலம், மரகதம், புட்பராகம்
பத்து தசாவதாரம் – மீன், ஆமை, வராகம், நரசிங்கம், வாமனம், பரசிராமன், இராமன், பலதேவன், கண்ணன், கல்கி பத்தழகு - சுருங்கச் சொல்லல், விளங்கச் சொல்லல், நவின்றோர்க்கினிமை, நன்மொழி புணர்த்தல், ஓசையுடைமை, ஆழமுடைமை, உலகமலையாமை, முறையின் வைத்தல், விழுமியது பயத்தல், விளங்கு உதாரணந்து ஆகுதல்