amma எண்ணம்
(Eluthu Ennam)
அம்மா
Amma
ஆத்தாஉன்மேல...
அந்த ஆகாயத்த போல...
பாசம் வைச்சனே..
அது வேசம் இல்லத்தா...
பாசம்தானாத்தா....
பள்ளிக்கூடம் போகயிலே
பத்து காசு தந்தியே..
அது காசு இல்லாத்தா...
என் மேல் வைச்ச
பாசம் தானத்தா...
ஹஸ்டல்ல படிக்கையில..
அரிசிமாவு தந்தியே..
அது மாவு இல்லாத்தா
நீ வச்ச பாசம் தானத்தா...
நித்தம் நித்தம்
தூக்கையில நெஞ்சு
உன்னை தேடுதம்மா
அது வேசம் இல்லாத்தா...
என் உடம்பு நோகுமுன்னா
உன் உசுரு நோகுமம்மா
அது வேசம் இல்லாத்தா
பாசம் தானத்தா...
நான் ஓடி போகுரேனு
ஓசி டிவி பாக்கிறேனு
உன் நெஞ்சு ஓயலயே
சொந்த டிவி வாங்குவரை...
அது வேசம் இல்லாத்தா
பாசம் தானத்தா...
மிச்ச சோறு
சாப்பிட்டயே
மீறி பிள்ளை வளந்ததுனூ...
நித்தம் ஆண்டவனை தேடினியே
நாங்க நல்ல வாழனுன்னூ
அந்த ஆண்டவனும் நீதானே
என்னை ஆண்டவளும் நீ தானே...
பட்டமும் வாங்கலயே
பதவிக்கும் போகலயே
பாசம் என்னும் பல்கலைகழகம்
அதில் முடிசூடா வேந்தனம்மா ...
நீதான் என் சாமியம்மா...
என்றும் அன்புடன்
டேவிட் சாமுவேல் ராஜா...
நான் கண் விழித்த நாளில் இருந்து,,, காணுகின்ற தெய்வம் நீ,,, கை கூப்பி வாணங்கியதும் இல்லை,, ஆனால் உன் உயிர் அருள் இன்றி நான் வாழ்த்திடவும் இல்லை,,, பட்டினிக் கிடக்கும் என் சட்டை பாக்கெட்....! அஞ்சரப்பெட்டிக்குள் இருந்து நீ எடுத்து தரும் ஐந்து ருபாய் நோட்டுக்காக,,,.! நீ சமைத்த உணவுவை நான் முதல் வாய் வைக்கும் வேளையில் என் முகம் பார்ப்பாயே...சப் என்று இருக்கும் உணவு கூட சக்கரையாக இருக்கும்..! கோபத்தில் திட்டினாலும்...! கொஞ்சி பேசினாலும்...! உன் அருகில் நான் குழந்தை தான்... வலி எடுக்கும் போது உன் பெயரையே வேண்டுகிறேன்........! அடுத்த ஜென்மத்தில் நீ பிறக்கும் வயிற்றில் கர (...)