கற்பனையும் கடமையும்.
தானாய் வந்திடும் கற்பனை எல்லாம்
வீணாய் போகும் விளங்காது தூங்கும்
தேனாய் அமுதாய் தித்திக்கும் தமிழால்
ஊணுடன் அதனை உயிர்ப்பித்தல் கடமை.
கடமை என்பது கண்ணியம் ஆகும்
கட்டுக்குள் அடங்கும் புண்ணியம் ஆகும்
“உடைமை “விடுத்து உருபொருள் கொடுக்க
கடமை தானமாய் வானமாய் உயரும்
உயரிய கற்பனை உள்ளத்தில் ஊறும்
ஊறிடும் எண்ணம் உழன்றிட வைக்கும்
உயர்ந்தவர் வாழ்வில் கற்பனை வளத்தை
பயன் தருவகையில் பயன் படுத்தியவரே
பயன் படுத்திட பாங்கும் வேண்டும்
கயமை துறந்து கரிமனம் நீங்கும்
நியமம் என்று கடமையைச் செய்தால்
நீனிலம் உன்னை நீண்டு வணங்கும்.