என் எல்லாவும் நீயே !

ஒவ்வொரு முறையும்
உயிருக்குள் உயிர்
உறைகிறது
உன்னை நினைக்கையில் ..............!

ரசவாத வித்தையை
எங்கே தான்
கற்றாயோ ?
என் பாறை முழுதும்
உன் பார்வையாலே
பூ பூக்கிறதே !

என்
எதிர்சொல் நீ !
ஆமாம் என்றால்
இல்லை என்பாய்
இல்லை என்றால்
ஆமாம் என்பாய் !

அலடிக்காதஅழகு !
என்னை அழ வைக்கும் திமிரு !
அடிப்பணிய வைக்கும் அன்பு !
எங்க வைக்கும் ஈர்ப்பு !என
எல்லாவுமாய்
எனக்கு நீயே எல்லாவுமாய்
நிமிடத்திற்கு நிமிடம்
என்னை
ஆட்டுவிக்க உன்னால்
மட்டுமே
முடியும் ..........!

உனக்கு வர்ணிக்கத் தெரியாது
ஆனால்
வசீகரிக்கத் தெரியும் !

வருடம் முழுவதும்
உன்னை நினைத்தாலும்
எல்லா நாட்களும்
புது புது விதமாய்
என்னுள் பயணிக்கின்றன ,
உன் நினைவுகளோடு !

காலை முதல்
இரவு வரை
என் எல்லா வேலையிலும்
நீ
என் உள்ளுக்குள்
இருக்கிறாய்
என்னும் போதுதான்
நாள்காட்டியின் பக்கங்கள்
கூட
நகர ஆரம்பிக்கின்றன .................!

மூளை மயங்கிய
முக்கால் தூக்கத்திலும்
நுரையீரல் விடுக்கும்
நிம்மதி பெருமூச்சிலும்
என்னுள் நீயே
நிரம்பி வழிகிறாய் !
நிமிசத்தின் புட்டிகளில்
யுகங்களை அடைக்கிறாய்!

இரவுக்குள் இருக்கும்
பகல் நீ !
என் இதயத்தை தவிக்கவிடும்
தந்திரன் நீ !

பிரிவு கொடுமை யானது !
ஆனாலும்
பிடிக்கிறது !
காரணம் !
அது நீ தந்தது .!

நீ
இல்லாத நொடி
நரகம் !
நீ நரகத்திற்கு
வரவழைத்தால் அதுவே
எனக்கு
சொர்க்கம்!

தூயவனே!
என் நம்பிக்கையின்
நாயகனே !

எப்போதுமே !
உன் களவு
என் கண்ணில் !
என் சாவு
உன் மடியில் ..............................!

எழுதியவர் : yathvika (8-Jan-13, 2:29 pm)
பார்வை : 264

மேலே