நேரு மாமா

வெண் புறா! வெண் புறா!
நேருமாமா வெண் புறா!
வெள்ளக் குள்ளாய் வெள்ளச் சொக்காய்
போட் டிருப்பார் என்றுமே!

நமது மண்ணைக் காப் பாற்ற‌
வீறு கொண்டே எழுந்திட்டார்!
காந்தி தாத்தா கூட நின்று
வாங்கித் தந்தார் சுதந்திரம்!

குழந்தை களை பார்த்து விட்டால்
இனிக்க இனிக்க பேசுவார்!
உலக மக்கள் அனை வருக்கும்
பிடித்த நல்ல தலைவராம்!

சொத்து சுகம் வைத் திருந்தும்
தேசம் காக்க வந்திட்டார்!
தனது சொத்தை தேசத் திற்கே
வாரித் தானே தந்திட்டார்!

குழந்தை களே! குழந்தை களே!
நேரு புகழ் பாடுங்கள்!
அவரது இனிய பிறந்த நாளை
அழகாய் கொண் டாடுங்கள்!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (26-Jan-13, 8:29 pm)
பார்வை : 34552

மேலே