வாலிப விளையாட்டு ..

முத்தங்களால்
எனக்குள் முத்திரை பதி...
மோகங்களால்
எனக்குள் மூழ்கி குளி...
மூச்சிக்காற்றால் மோகனம் பாடு

புடவைக்குள் புதையலேடு..
ரவிக்கையின் ரகசியம் கண்டுபிடி ..
வேர்வை குடை பிடித்து விளையாடு
ஆடையோடு வெட்கத்தையும் கழற்றி வை

விரல்களால் வீணை மீட்டு
விடிந்த பிறகும் வேகம் காட்டு..
ஆசைகளை அவசரமாய் பரிமாறு ..
எந்திரமாய் என்னோடு சுழல் ..

தாகம் குடித்து தனிமை மிச்சம் வை ..
தாவணி சூட்டில் என்னை தகி..
மன்மத மேட்டில் எனக்கொரு
மண்டபம் கட்டு..

முடிந்த வரை என்னை
முழுதாய் திருடு ..
எப்போது தேவையோ
எடுத்து செல் ..
திகட்டும் வரை தேன் குடி

தேதி பாராமல் தேடி வா
உனக்காக தோண்டப்பட்ட கிணறு
உறிஞ்சி குடிப்பதும் .. உணர்ந்து குளிப்பதும்
உன் பாடு ..

காயப்படுத்து வலி இல்லாமல் ..
ஒதுங்காதே ..உடன்படு ..
இது தேவை ...தினமும்
மனசுக்குள் மனப்பாடம் செய்து வை..
சுகத்தின் வேர்வரை தேடு

இப்போது முடிந்தாலும்
மறுகணமே எட்டிப்பார்குதே ஏக்கம் ...!!

எழுதியவர் : அபிரேகா (27-Jan-13, 2:17 pm)
பார்வை : 166

மேலே