விடியலை ஒளித்துவை.

இரவுக்குத் துணையாக
ஏங்கியே தவிக்கிறேன்
பிரிந்தலையும் பெண்ணிலவே
பிடித்துவா கண்ணாலனை.
பனி நனையும் இரவேநீ
பழகயாரைத் தேடுகிறாய்?
வேணடாமந்த விளையாட்டு
விடியலை ஒளித்து வை.
எரியுங் கொடுஞ் சூரியனே
இனியும்நீ வரவேண்டாம்
பிரிவா லெரியுமென்னை
பின்னும்நீ சுடவேண்டாம்.