" மழலையின் வானம் "

"குடையே"! என்று நினைத்தேன்
கொட்டுகிறாயே
மழையை


"ஓ" நிழற்குடை
தானோ ? என்று
வினவினேன் வீசுகிறாயே
கனல் வெயிலை


மழையும் தீண்ட
வெயிலும் கனக்க
அப்போ
நீ என்ன குடை?
என்று வினவினேன்

நான் குடையல்ல
"குடை மாதிரி "
என்று சிரித்தாய்
என் விழி மறைத்த வானமே!

எழுதியவர் : (3-Feb-13, 2:39 pm)
சேர்த்தது : yogasanna kk
பார்வை : 94

மேலே