கொஞ்சம்
உன்னை சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்
உலகம் அர்த்தப்படும்
ராத்திரியின் நீளம்
விளங்கும்
உனக்கும்
கவிதை வரும்
கையெழுத்து
அழகாகும்
தபால்காரன்
தெய்வமாவான்
உன் பிம்பம் விழுந்தே
கண்ணாடி உடையும்
கண் இரண்டும்
ஒளி கொள்ளும்
காதலித்துப்பார்
அமுதம்