கடமை
புகழ்ச்சிக்கும் இகழ்ச்சிக்கும்
நா ஒன்றுதான்
வெற்றிக்கும் தோல்விக்கும்
களம் ஒன்றுதான்
இரவுக்கும் பகலுக்கும்
நாள் ஒன்றுதான்
நன்மைக்கும் தீமைக்கும்
விதி ஒன்றுதான்
வாழ்வுக்கும் தாழ்வுக்கும்
வாழ்க்கை ஒன்றுதான்
வரவுக்கும் செலவுக்கும்
பொருள் ஒன்றுதான்
அன்பிற்கும் ஆதிரத்திற்கும்
இதயம் ஒன்றுதான்
உள்ளம் தராசானால்
ஏற்றத் தாழ்வு இல்லை
கடமையைச் செய்
பலனை எதிர்பாராதே!