சகுனம்.......................!!

அவசரமாக என் இரு சக்கர

வாகனத்தில் கிளம்பினேன்,

குறுக்கே பூனை!

மிதித்தேன் பிரேக்கை,

விழுந்தேன் கீழே,

காலில் வழிந்தது ரத்தம்,

அன்னை

''சகுனம் சரி இல்லை'' என்றாள்.


''உண்மைதான் அம்மா சகுனம் சரி இல்லை''

பரிதாபத்தோடு இறந்து

கிடந்த பூனை

பார்த்து சொன்னேன்

நான்............................!!

எழுதியவர் : messersuresh (16-Feb-13, 4:25 pm)
சேர்த்தது : புகழ் சுரேஷ்
பார்வை : 135

மேலே