இறந்தபின் பிறந்தேன்

வெட்டி சாய்க்கப்பட்டபின்
வீழ்ந்து விட்டேன் ............
இறந்து போன எண்னை
இழைத்தும் ................
வரைந்தும்...............
செதுக்கியும் ................
உருவம் சமைத்தும் .................
வர்ணம் தீட்டியும் ............
சிற்பமாய் வடித்தனர்
இறைவனால்படைக்கப்பட்ட நான்
மீண்டும்.....................
இறைவனானேன்
சிற்பியின் கை வண்ணத்தில் ...............
உயிரோட்டமான
மரச்சிற்பமாய் ............

எழுதியவர் : munaivar va. inthiraa (19-Feb-13, 8:27 pm)
சேர்த்தது : bhavaniindra
பார்வை : 143

மேலே