!! தந்தையே ..,,,
மருந்தின் மகத்துவத்தை ஒத்த
உன் மார்பில், மடிபிள்ளையாய்
என்னை ஏந்தி,
முழங்கால் அளவு முட்பாதையிலும்
முகம் மலர்ச்சியோடு முன் சென்றாய்
என் வாழ்க்கை முள்ளை
மலராக மாற்ற....
மாசற்ற என் அன்னை,
பூவாய் மலர,
அவள் நிழலில்
இதழ் விரிக்கா மொட்டாய்
நான் வாழும் தருனம்
எங்களை காத்து நின்றாய்
ஒரு செடியாய்
பல புயல்களை பளுதூக்கி!!!