அவனொரு தொடர்க்கதை,,,,
அவனொரு தொடர்க்கதை,,,,
நான் நிரந்தரமற்றவனெனதெரிந்தும்
என் குசுருதிகளை
உன்னிடமேவுதிர்க்கின்றேன்,,
நீயுமதை ஏற்றுமேற்காததைப்போலவே
ஏனோவிருக்கிறாய்
எல்லாவற்றையும் நிறுத்திவிடுகிறேன் நான்
பின்பு சமாதானமாய்வந்து
ஒரு சண்டைக்குவித்திடுகின்றாய்,,
ஏனென்றுகேட்டல்
மௌனப்புன்னகைச்சிந்துகின்றாய்,,,
நானோ அதில்
அர்த்தமில்லாதவனாய்ப்போகின்றேன்,,
எதுகைமோனையில்லாத
என் கவிதைகளை
உனக்குமட்டுமேவுரையிடுகின்றேன்,,,
உன்னோடெனக்குள்ள
இடைவெளியைக்குறைப்பதாக எண்ணி ,,
நீயோ அதைத்தவறாகபுரிந்துகொண்டாய்
என்னையொரு
குழந்தை மனநோயாளியாய்பாவித்து
எத்தனையோமுறை நீயென்னை
விலகிப்போவென்றுசொல்லியும்
விலகாமற்பார்த்திருக்கின்றேன்,,,
இன்னொருமுறை உன்னுடனுரைக்க
வார்த்தைகளேதேனும்
கிடைக்காதாவென்று,,,,
உன்னையெனக்குப் பிடித்திருக்கிறதடா
ஒருமுறையென்னோடுவந்து
வாழ்ந்துவிட்டுபோவென்றுசொல்,,,
பாதங்களாய்வருகின்றேன்,,
நீ கடந்துசெல்லும்
உன் எல்லைவரை,,,
இல்லை வேண்டவேவேண்டாம்
என் மனதையாட்கொள்ளும்
உன்னிந்த ஆண்மைச்செருக்கு ,,
என்று நீ சொல்லிச்சென்றாலும் ,,,
உன்னிடஞ்சொல்லாமலேயே
தொடர்ந்துவிடுகிறேன்
அனுசரன்,,,,