உழவனைத் தொழு..!
உலவும் காற்று ஒய்வெடுத்தால்
உலகம் பட்டு போய்விடும்...!
இயங்கும் இதயம் ஓய்வெடுத்தால்
மூச்சு விட்டு போய்விடும்...!
கவிஞன் சிந்தனை ஒய்வெடுத்தால்
கற்பனை கெட்டுப்போய்விடும்...!
உழவன் கரங்கள் ஓய்வெடுத்தால்
அகிலமே மட்டுப்போய்விடும்...!