குடியரசு

குடியரசே,
நீ சுதந்திரத்தை அச்சாக்கி
சுழன்ற போதுகருத்தரித்தாய்
அரும்பு மீசை அரும்பும் போதோ
அசைந்தாடி போய் விட்டாய்
கோடி வீட்டு குப்பனின் ஓலை குடிசை
காற்றினில் கிடுகுகள் பறக்க படபடக்கிறது
மாடி வீட்டு சீமான்களின் செவிகளில்
அதன் இன்னொலி.கிளுகிளுப்பூட்டுகிறது
எட்டாத உயரத்தில் விலைவாசி
பட்டொளி வீசி பறக்கிறது.
எத்தனையோ ஜீவன்களின் இதய முனகல்
அதனோடு உறவாடுகிறது.
பட்டாடை சுற்றி வரும்
பகல் வேஷங்கள் அரங்கேறுகின்றன.
பட்டுப்போன மரங்களாக
பாதையோரத்தில்
அன்றாடங்கள்.
குடியரசே,
புதுமையாய் உனை காண
செய்த தவம் ஓராயிரம்.
தரை தவழும் குழவியாக இருந்திடுதே
எம்மவரின் வாழ்க்கை!

எழுதியவர் : முருகன்தில்லைநாயகம் திர (4-Mar-13, 9:37 am)
பார்வை : 145

மேலே