வகர வரிசை ....

வரம் தரும் இறைவனையும்
வாணிகம் செய்யும் மானிடா !
விதைத்த வினை நீ விண்ணுலகம் சென்றாலும்
வீறு நடை போட்டு வரும் ...
வரவும் செலவும் வந்து போய்
வலுவூட்டும் வாழ்க்கையடா !
வெகுளியாக நீ இருந்தால்
வேட்டையாடும் உலகமடா !
வையத்துள் வாழ்வாங்கு வாழ
ஒவ்வொரு மனிதனும்
ஒவ்வோர் நிலைதனிலும்
வௌவால் மாதிரி தொங்காமல்
தொண்டுள்ளம் கொண்டு
தூய்மையாக வாழவேண்டும் ....

எழுதியவர் : (4-Mar-13, 10:04 am)
சேர்த்தது : paptamil
பார்வை : 183

மேலே