எண்களுக்குள் அடங்கிய எண்ணங்கள்

நாகரிக மங்கையே !
என்னவளே !
என்னுயிர் காதலியே !
எண்களுக்குள் அடங்கிய
நம் எண்ணங்கள்
என்று வெளிப்படும் ?!
வெளிர்மஞ்சள் காலைப்பொழுது
வெளிப்படுத்தும்..
உன் நினைவுகளை
எப்படியடி மறைத்திடுவேன் ?!
அந்தி மாலைப்பொழுதில்
புத்தம்புது வெள்ளி
வெளிப்படுத்தும்..
உன் புன்சிரிப்பினை
எப்படியடி எதிர்நோக்குவேன் ?!
புனர்ஜென்மம் எடுத்ததாய்
ஆர்ப்பரிக்கும் நதிகளே !
கூறுங்கள்..
அருவியினின்று நதியாய்
மரித்து பிறந்த
அத்தருணங்களில்..
எத்தனை துன்பங்கள்
உன்னுள் உறவாடியதென்று !
என்னவளே !
என்றடி வெளிப்படும்..
எண்களுக்குள் அடங்கிய
நம் எண்ணங்கள் ?!
_மகா