தட்சணை!

நீ என்னை
மணம்
செய்யும் முன்
தட்சணையாக
பணம் நகை
கேட்டாய்!
தந்தேன்!
உன் மனைவியான
பின் என் காதலையும்
உன் காமத்தையும்
தட்சணையாக
கேட்டாய்!
கொடுத்தேன்!
நீ இறந்த பின்
தட்சணையாக
என் பூவையும்
பொட்டையும்
கேட்கிறாயே?
தட்சணைகள்
போதாதா
கணவனே?

எழுதியவர் : இள. சக்தி (20-Mar-13, 11:12 pm)
பார்வை : 104

மேலே