காதல் + கற்பனை(3)

அவன் விடை பெற்று சென்றான்,
அவள் தனிமைதனில் தன்னைக் கரைத்துக்கொண்டாள்.
அவன் நினைவுகளை போர்வையாக்கிக் கொண்டாள்..
அவன் புன்னகை தவழும் முகத்தை,
நெஞ்சில் நிறுத்திக் கொண்டாள்...
அவனின் சாந்தமான கண்களை கற்பனையில்
கண்முன் கொண்டு வந்தாள்...
எப்பொழுதும் நினைவிலேயே உழன்று
கொண்டிருக்கும் அவனுடன் மனதினில்
தர்க்கம் செய்து புலம்பித் தீர்த்தாள்..
"என்னுடன் இருக்கும் பொழுது
என்னை தவிக்க விடுகிறீர்கள்...
என்னை விட்டு பிரிந்து சென்றவுடன்,
துடிக்க வைத்து விடுகிறீர்கள்,,,
கண்ணை திறந்தால் கனிந்து விடுகிறீர்கள்,
கண்ணை மூடினால் கனவாக மாறிவிடுகிறீர்கள்....
பகலின் அணைப்பில் நான் இருந்தால்,
உங்கள் நினைவே என்னை வாட்டுகிறது...
நித்திரையின் அணைப்பில் நான் இருந்தால்,
உங்கள் நினைவே கனவிலும்
என்னை ஆட்டிப் படைக்கின்றது....
பகலிலும் இரவிலும்
கனவிலும் நனவிலும்
என்னை அலைக்கழிக்கும்
என் அன்பிற்குரியோனே
பிரிவே இல்லாத நாள் ஒன்றை விரைவில்
வகுத்து வைப்பீரோ"............
அவள் கற்பனையிலேயே தன் ஆதங்கத்தை
அவன் முன் சமர்ப்பித்தாள்......!!!

(தொடரும் பாகம் 4)

எழுதியவர் : மகேஸ்வரி periasamy (24-Mar-13, 7:59 pm)
பார்வை : 101

மேலே