என் தந்தைக்காக ..

பெண் பிள்ளை பிறந்தால்
முகம் சுளிக்கும் மண்ணில்
நீ இருப்பாய் என்ற தைரியத்தில்
பெண்ணாய் பிறந்தேனோ நான்
அறியவில்லை ..!!

பிறந்த கணம் என் பிஞ்சு விரலில்
உன் முத்தம் ..

என் அழுகை நிற்க
கோமாளியாக எதிரில் நின்ற நீ
என் வாழ்கையின் கதா நாயகன் ...

தவறு செய்தால் தண்டிப்பாய்
தண்டித்த பின் , என்னை சமாதானம் செய்யும்
அந்த இனிமையான தருணங்களை எண்ணித்தான்
என் அடுத்த தவறுகள் தொடர்கின்றன ....

என் சந்தோஷத்திற்காக
நீ செய்த தியாகங்கள்
அளவிட முடியாதையா...

வண்டியில் உன் பின்னால் அமரவைத்து
ஊர் எல்லை வரை ஒரு பயணம் செய்வாய்
மகிழ்ச்சியின் உச்சத்தில் மனம்
மறக்க முடியுமா அந்நாட்களை ...

ஓர் நாள் , உன் தோள் மீது
என் தலை வைத்து கதை சொல் என்றேன் ,
உன் வாழ்க்கை கதையெய் கூறினாய்
என் கண்களில் கண்ணீர் வழிய
அடுத்த பிறவியில்
உன்னை என் மகனாய் பெற்றெடுக்க
பிராத்தனை செய்தது என் மனம் ...

எழுதியவர் : (30-Mar-13, 7:52 pm)
பார்வை : 78

மேலே