உன்னை பிடித்திருக்கிறது

உன்னை பிடித்திருக்கிறது காரணம் தெரியாமல்
மல்லி மாலையில் மலரும் தெரிவதில்லை
மணமது விசும் மறைக்கமுடியாமல்
என்னுள் மலர்ந்த மலரா ?
நேசம் வருகிறது மறைக்க முடியாமல் .....

வாசம் விசும் உன் பார்வை
தேசம் கடந்து மடல் கொண்டுவருகிறது ...

கொலுசு தவழும் பாதம்
புது வரிகளை மிச்சம்
வைத்து போகிறது என் கவிதைக்காக ....

வானவில் பேசுகிறது இன்று
எட்டவது வண்ணம் பிறக்குமாம்
உன் கார்மேக குழல் கண்டு .....

சில வரி உரையாடல் போல்
நீண்டு கொண்டே போகிறது நிமிடங்கள்
உன் தரிசனம் காணாமல் என்கிறது என் விழிகள் .....

வழி விழி இவை அனைத்தும்
உன்னுடன் வரு மொழி ஒளி
இவைக்கு தானோ தவமிருக்கிறது .....

உன் பாடசாலை இன்னுமொரு காவியம் சொல்லும்
அழகிய நினைவுகள் தவழும் அங்கே
ஏன் நீ படித்து முடித்தாய் என்ற ஏக்கத்துடன் ......

எழுதியவர் : (5-Dec-09, 12:17 pm)
சேர்த்தது : nirmala
பார்வை : 1233

மேலே