பொம்மையும் மிட்டாயும் !

மீந்து போன
மிட்டாயுடன்
பாரம் சுமந்த
மனதோடு
இல்லம் ஏகும்
எஜமானருக்கு
எப்படி ஆறுதல்
சொல்வது என்ற
யோசனையுடன்
மௌனமாய் இருந்தது
மிட்டாய் பொம்மை !

எழுதியவர் : முத்து நாடன் (7-Apr-13, 3:12 pm)
பார்வை : 83

மேலே