எத்தனை வித்தியாசங்கள் !
நெஞ்சம் எழுதிச் செல்கிறது
எத்தனையோ நினைவுகள்
வார்த்தைகளில் வரிவடிவம்
பெற்றவைகள் பல.
உள்ளத்தின் உள்ளே விரிந்த
கனவுகளுக்கு
பகலில் பாதை தேடுகிறேன்.
எண்ணத்தை எழுத்தில் நிறுவுவதற்கும்
யதார்த்தத்தில் நிறுவுவதற்கும்
எத்தனை வித்தியாசங்கள் !
---கவின் சாரலன்