விலை மாது

சுகங்கள் அவளிடம் சுத்தமாக இல்லை
அது அவளுக்கு மட்டுமே தெரியும்
அதை அறியாத ஆண்கள்
அவளை ஈக்கள் போல் மொய்க்கிறார்கள்
அவள் இதயத்தை ஈட்டியால் தைக்கின்றார்ள்.

கட்டில் மேல் கிடக்கின்றாள்
ஒரு கட்டை போல் கிடக்கின்றாள்
சுருதியும் கிடையாது
சுகங்களும் கிடையாது அவளிடம்.

இவளிடம் தேகங்கள் இணைவதுதில்லை
தாகங்கள் தணிகின்றன
தாகம் அடங்கும் போது
இவளும் தீர்ந்து விடுகிறாள்.

எல்லோரும் தோற்கிறார்கள் இவளிடம்
இவளும் தோற்கிறாள் எல்லோரிடமும்.

போதையில் பாதை தெரியவில்லை
பூக்கள் மேல் நடப்பதாக எண்ணி
முட்கள் மேல் நடந்துவிட்டாள்
வெகுதுரம் கடந்துவிட்டாள்
திரும்பவும் முடியாமல் எல்லையை
அடையவும் முடியாமல் நிற்கின்றாள்.

இவள் இச்சைகள் இணைந்த இடம்
பல பேர் எச்சில்கள் உமிழ்ந்த இடம்
இவள் அடிக்கடி குளிப்பதில்லை
இருந்தும் நினைந்தே இருக்கிறாள்
இருந்தும் சுத்தம் இல்லை.

இவள் கங்கையிலே குளித்தாலும்
குவமே குளிப்பதாக கங்கையிலே கலப்பதாக
இவள் நினைக்கின்றாள்
கங்கை அல்ல.

முகம் முழுவதும் எச்சில்கள்
என்று நினைக்கின்றாள்
கூனி குறுகி நிற்கின்றாள்
உடல் மட்டும் விறைப்பாக இருக்கிறது
மரம் என்ன பட்ட பின்பு சுருங்கிடுமா ? வளைந்திடுமா ?.

இவளிடம்
இலைகள் கிடையாது
கனிகள் கிடையாது
இருந்தும் பறவைகள்
எதையோ சுவைத்துவிட்டு போகின்றன
பாலைவனத்தில்
ஒரு வேலை பிணம் தின்னிகளாக இருக்குமோ ?.

கை வண்டி இழுப்பவன் கூட
இழுத்ததில்லை இவள் சுமைகளை
இவள் இந்த பாதையில் பயணிக்கத்தொடங்கிய
முதல் என்று வரை இழுக்கிறாள்
மனசுமை மரணசுமை.

வாழ்க்கையை கடந்துவிட்டாள்
துறவரம் பூண்டுவிட்டாள்
இருந்தும் சுமைகள்
அவளை தொடர்கிறது.

பணமும் இது தவறில்லை
என்ற பெண்ணின் மனமும்
உள்ள வரை படுக்கை தொடரும் .....

சுடுகாட்டு பிணம் கூட
சுட்ட பின்பு சுருண்டேழும்
இவளோ பல தேகங்கள் பட்டபின்பும் உணரவில்லை உணர்ச்சியில்லை
உணர்வுகள் இறந்தபின்பு இவள் யார்?
பாவம்.

இது அவளின் இறுதி ஊர்வலம் என்று தெரிந்தேதான் நடக்கின்றாள்
படுக்கையை விரிக்கின்றாள்

இவளுக்கு தேகங்கள் மீது தாகமில்லை
இவளும் பத்தினிதான்

எழுதியவர் : sureshtvr (24-Apr-13, 4:45 pm)
சேர்த்தது : sureshtvr
பார்வை : 97

மேலே