தமிழைக் காப்போம்

தமிழனாய் பிறந்தோம்
தமிழனாய் வாழ்வோம்
தரணியில் வாழும்வரை
தமிழைக் காப்போம்
தமிழினத்தை காப்போம் !
தமிழராய் ஒன்றிடுவோம்
தமிழரை ஒன்றிணைப்போம்
தமிழரில் பிரிவினை தகர்ப்போம்
தமிழ் மொழியின் சிறப்பை
தரணி எங்கும் பரப்பிடுவோம்
கருத்தால் வேறுபாடு இருப்பினும்
உள்ளத்தால் பிரிவினை கூடாது !

ஏழாம் தொகுப்பில் அடி பதிக்கும்
ஏதும் அறியா தமிழ் பித்தன் நான் !
குறை இருக்கும் குறும்பு இருக்கும்
குற்றம் இராது குசும்பு இராது என்
பிள்ளைத் தமிழில் கிள்ளை குரலில் !

எல்லோரும் எல்லாம் பெற்றிடவும்
என்றும் இன்புற்றிருக்கவும் எனது
அன்பு நிறைந்த அடியேனின் வாழ்த்துக்கள் !

பயிர் என்றாலே களையும் இருக்கும்
உழுதலும் அவசியம் களைதலும் தேவையே
பயன் பெற்றிட பலரும் பசியாற
பலவும் நடந்திட பாரினில் நடந்தேற
ஒன்றிடுவோம் வென்றிடுவோம் !


பழனி குமார்

எழுதியவர் : பழனி குமார் (26-Apr-13, 10:13 pm)
பார்வை : 143

மேலே