!!!===(((சாதிகள் இல்லையடி பாப்பா)))===!!!

சாதிகள் இல்லையடி பாப்பா - என்று
சொன்னவனை இகழ்வது பாவம்...
சாக்கடையாய் ஓடுதிங்கே சாதி - அதில்
நீராடி நீந்துவதோ நீதி....?
வீதியிலே வாடுமொரு கூட்டம் - அதை
விலக்கிவைத்து போடும் சாதியாட்டம்...
பாடையிலே போனபின்பு சடலம் - உன்னை
எரிப்பவனே எழுதிடுவான் படலம்...
வலிகள் அனைவருக்கும் ஒன்று - அட
வழிகளில் வந்ததுதான் வம்பு....
சீவாதே சாதியலின் கொம்பு - அதை
உடைப்பதற்கும் பிறக்குமொரு கம்பு...
சாதிசொல்லி வாழுரானே சித்தி - அது
பிரிவினையை விதைக்கின்ற யுத்தி..
தீண்டாமையை நொருக்குமெனது சக்தி - அந்த
தீட்டுகளை எரிக்கும் எனது புத்தி...
காதல் சாதியலை சரிக்கும் - நம்ம
நட்பு மதங்களையும் உடைக்கும்...
இதுகாலம் கனிகின்ற தருணம் - நாம்
கைதட்டி எழுகின்ற பயணம்...!!!
-----------------------(நிலாசூரியன்).