கோடை கொண்டு வந்த கொடை!!!

உச்ச நிலையில்
வெயில் நாக்கில்
எச்சில் ஊறும்
பழங்களை பரிசளிக்க வந்ததே!!!
****************************************************************************
நீர்ச்சத்து மிக்க
தர்பூசணி சாப்பிடுவதால்,
உடலை வறட்சியின்றி வைக்குமே !!!
தர்பூசணியில் உள்ள
லைகோபைன், சூரியக்கதிர்களின்
தாக்கத்தில் இருந்து
சரும செல்களை
பாதுகாத்து, சரும
புற்றுநோய் வருவதை தடுக்குமே!!!
****************************************************************************
ஆரஞ்சு பழத்தில்
பொட்டாசியம் அதிகம்
உள்ளதால் உடலில்
ஆங்காங்கு தங்கியுள்ள
மாசுக்களை,வியர்வையின்
மூலம் வெளியேற்றி,
தசைப்பிடிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.!!!
****************************************************************************
திராட்சை பசியையும்,
தாகத்தையும் தணிக்கும்
சக்தி கொண்டவை.
இரத்தத்தை சுத்திகரிக்கும்
தன்மை கொண்டது!!!
இதில் உள்ள
பைட்டோகெமிக்கல்,
புற்றுநோய், இதயநோய்
நரம்பு தொடர்பான பிரச்சனைகளை தடுக்கும்!!!
****************************************************************************
அன்னாசி பழத்தில்
ப்ரோமெலைன் என்னும்
நொதி இருப்பதால்,
அது புரோட்டீன்
மற்றும் கொழுப்புக்களை
எளிதில் கரையச்
செய்யும். கோடையில்
சாப்பிடுவதற்கு ஏற்ற
பழங்களுள் இது மிகவும் சிறந்தது!!!
****************************************************************************
பழங்களின் அரசனான
மாம்பழம், கோடையில்
அதிகம் கிடைக்கும்.
மாம்பழத்தில் இரும்புச்சத்து
மற்றும் செலினியம்
போன்ற சத்துக்கள்
அதிகம் உள்ளது.
எனவே முடிந்த
அளவில் இதனை
சாப்பிட்டு உடலை
ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்!!!
****************************************************************************
ஸ்ட்ராபெர்ரியை சாப்பிட்டால்,
கோடையில் ஏற்படும்
பிரச்சனையாக சிறுநீரக
பாதையின் ஏற்படும்
நோய் தொற்றுகளை தவிர்க்கலாம்!!!!
****************************************************************************
எலுமிச்சையை சாறு
பிழிந்து, கோடையில்
அவ்வப்போது குடித்தால்,
தாகம் தணிவதோடு,
உடலுக்கு வேண்டிய
வைட்டமின் சி சத்தும் கிடைக்கும்!!!
****************************************************************************
நாவற்பழம்,நெல்லி,
ஈச்சம் பழம்,இளநீர்,
நொங்கு என
எல்லாவற்றையும் ரசித்து
ருசித்து உட்கொள்ளுங்கள்!!!
உடல் நிலையை
இயற்கையாய் பேணுங்கள்!!!
கோடையை பழங்களோடு கொண்டாடுங்கள்!!!